இந்தியா

பயிர் கடன்களுக்குகான வட்டி முற்றிலும் தள்ளுபடி - மத்திய அரசு பரிசீலனை

உரிய நேரத்துக்குள் பயிர் கடனை திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியை முற்றிலுமாக தள்ளுபடி செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தந்தி டிவி

2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், விவசாயிகள் பிரச்சினை முக்கிய இடத்தை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், விவசாயிகளை கவரும் வகையிலான அறிவிப்புகளை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, உரிய நேரத்துக்குள் பயிர் கடனை திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியை முற்றிலுமாக தள்ளுபடி செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது, 7 சதவீத வட்டியில் வழங்கப்படும் பயிர்கடனை முறையாக செலுத்தும் விவசாயிகளுக்கு 3 சதவீதம் வட்டி தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், உரிய தேதிக்குள் பயிர் கடனை திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு மீதமுள்ள 4 சதவீத வட்டியையும் தள்ளுபடி செய்யும் திட்டத்தை புத்தாண்டு பரிசாக மத்திய அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் விவசாயிகள் செலுத்தி வரும் பயிர் காப்பீட்டு பிரிமியம் தொகையை தள்ளுபடி செய்யவும் மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ