இந்தியா

சபரிமலையில் இன்று காலை இரண்டு பெண்கள் தரிசனம்...

சபரிமலை சன்னிதானத்தில் இன்று அதிகாலை கேரளாவைச் சேர்ந்த 40 வயதான இரண்டு பெண்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தந்தி டிவி

* உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து, சபரிமலைக்கு செல்ல, அனைத்து வயது பெண்களும் முயன்றனர். ஆனால், பக்தர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால், அங்கு பதற்றம் நிலவுவதால், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

* இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் சபரிமலை செல்ல முயன்ற கோழிக்கோட்டை சேர்ந்த பிந்து மற்றும் மலப்புரத்தை சேர்ந்த கனகதுர்கா

ஆகிய இரண்டு பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்நிலையில், அவர்கள் இன்று அதிகாலை 3.45 மணியளவில், சபரிமலையில் வி.ஐ.பி.க்கள் செல்லக்கூடிய பாதையில் சென்று சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்தனர்.

* அவர்களது பாதுகாப்புக்கு வந்த போலீசார் சிலர் சீருடையிலும், சாதாரண உடையிலும் சென்றுள்ளனர். பெண்கள் இருவர் சபரிமலையில் சாமி தரிசனம் செய்த வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அடுத்து என்ன செய்வது என தந்திரி தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்