இந்தியா

தமிழகத்தை சேர்ந்த இருவருக்கு சாகித்ய அகாடமி விருது

இந்தாண்டுக்கான பால புரஷ்கார், யுவ புரஷ்கார் விருதுகளை தமிழகத்தை சேர்ந்த இருவருக்கு சாகித்ய அகாடமி அறிவித்துள்ளது

தந்தி டிவி

இந்தாண்டுக்கான பால புரஷ்கார், யுவ புரஷ்கார் விருதுகளை தமிழகத்தை சேர்ந்த இருவருக்கு சாகித்ய அகாடமி அறிவித்துள்ளது

பால புரஷ்கார் பிரிவில், 21 விருதுகளும், யுவ புரஷ்கார் பிரிவில் 21 விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. 22 மொழிகளை சேர்ந்த நடுவர் குழு இந்த விருதுகளை தேர்வு செய்துள்ளது. சிறகு முளைத்த யானை என்ற கவிதை தொகுப்புகாக தமிழகத்தை சேர்ந்த கிருங்கை சேதுபதிக்கு, பால புரஷ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, அம்பு படுக்கை என்ற சிறுகதை தொகுப்பிற்காக தமிழகத்தை சேர்ந்த சுனில் கிருஷ்ண‌ன் என்பவருக்கு யுவ புரஷ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பால புரஷ்கார், யுவ புரஷ்கார் விருதுகள் நேரு பிறந்தநாளான நவம்பர் 14 ஆம் தேதி வழங்கப்பட உள்ளன. விருது பெறும் கலைஞர்களுக்கு விருதுகளுடன் 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்படும்.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்