இந்தியா

டிவி நிகழ்ச்சியில் கொடூரமாக அடித்துக்கொண்ட இருவர்... -பறந்த சேர்..! பதறிய மக்கள்

தந்தி டிவி

தெலுங்கானாவில், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வேட்பாளர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தெலுங்கானாவில் அடுத்த மாதம் 30ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரபல தெலுங்கு தொலைக்காட்சி நிறுவனம் வெற்றி யாருடையது? என்ற பெயரில் மாநிலம் முழுவதும் நிகழ்ச்சி நடத்தி வருகிறது. இந்நிலையில், குத்பல்லாபூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிஆர்எஸ் கட்சி வேட்பாளர் விவேகானந்தர் கவுடு, பாஜக வேட்பாளர் ஸ்ரீசைலம் கவுடு கலந்து கொண்டு பேசினர். அப்போது இரண்டு பேருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் இருவரும் மாறி மாறி தாக்கி கொண்ட நிலையில், கட்சி தொண்டர்களும் தாங்கள் உட்கார்ந்திருந்த நாற்காலிகளை வீசி மோதலில் ஈடுபட்டனர். இதையடுத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், இரண்டு பேரையும் சமாதானம் செய்து நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தினர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை