இந்தியா

கர்நாடகாவில் 2 காங். எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா...

முதலமைச்சர் குமாரசாமி வெளிநாடு சென்ற நிலையில் பரபரப்பு.

தந்தி டிவி

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். விஜயநகர் தொகுதி உறுப்பினர் ஆனந்த் சிங் மற்றும் கோகாக் தொகுதி உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஜார்கிஹோலி ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். ஆனந்த் சிங், தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்கிய நிலையில், ஜார்கிஹோலி, சபாநாயகரிடம் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். முதலமைச்சர் குமாரசாமி தற்போது அமெரிக்காவில் உள்ள நிலையில், கூட்டணி கட்சியான காங்கிரசில் இருந்து 2 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்