இந்தியா

'பிரளய்' ஏவுகணையின் 2 தொடர்ச்சியான சோதனைகள் வெற்றி

தந்தி டிவி

ஒடிசா கடற்கரையில் உள்ள அப்துல் கலாம் தீவில் இருந்து, உள்நாட்டு தயாரிப்பான பிரளய் ஏவுகணையின் இரண்டு தொடர்ச்சியான சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியதாக டிஆர்டிஓ தெரிவித்துள்ளது. குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணையான இதன் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச தூர திறனை சோதனை செய்யும் வகையில் நடத்தப்பட்ட சோதனைகளில் ஏவுகணை திட்டமிட்ட பாதையைப் பின்பற்றி இலக்கை துல்லியமாக அடைந்ததாக இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. சுமார் 150 முதல் 500 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்ட பிரளய் ஏவுகணை, இந்திய ஆயுதப்படைகளின் திறன்களை மேம்படுத்தும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங் தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை