ஓடும் ரயிலில் பெண்ணை சீண்டிய டிக்கெட் பரிசோதகர் கைது கேரளத்தில் ஓடும் ரயிலில் பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிக்கெட் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவனந்தபுரத்தில் இருந்து நிஜாமுதீன் நோக்கி சென்ற ரயிலில் இளம்பெண்ணை ஷிஜூ என்ற டிக்கெட் பரிசோதகர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.
இதனையடுத்து அவர் ரயில்வே போலீசாருக்கு செல்போன் மூலம் தகவல் அளிக்க, அடுத்த ரயில் நிலையத்தில் அவரை போலீசார் கைது செய்தனர். போலீசார் விசாரணையில் ஷிஜூ மது போதையில் இருந்ததும் தெரியவந்துள்ளது.
#train #ttr #abuse #thanthitv