மம்தா பானர்ஜி மருமகனின் கட்சி அலுவலகத்தை இடிக்க இடைக்கால தடை திரிணமூல் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், மம்தா பானர்ஜியின் மருமகனுமான அபிஷேக் பானர்ஜியின் கட்சி அலுவலகத்தை இடிக்க, கொல்கத்தா உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. உரிய கட்டுமான அனுமதியின்றி கட்டப்பட்டதாகக் கூறி, தெற்கு 24 பர்கானாஸ் மாவட்ட நிர்வாகம் இடிப்பு பணியைத் தொடங்கியிருந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், கட்டடம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க அரசுக்கு உத்தரவிட்டு, ஜூலை இறுதி வரை தற்போதைய நிலையே தொடர வேண்டும் என தெரிவித்தது.