இந்தியா

"மரங்களை வெட்டாத மாற்றுவழி உள்ளதா?" - நேரில் ஆஜராகி பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

4வது ரயில்வழிச் சாலை ஏற்படுத்த திட்டம்

தந்தி டிவி

டெல்லி- மதுரா இடையே 4-ஆவது ரயில் பாதை அமைக்க மரங்களை வெட்டுவதா? என வடக்கு ரயில்வேயிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. டெல்லி - மதுரா இடையிலான தாஜ் பகுதி சரிவக மண்டலமாக குறிக்கப்பட்டுள்ளது. இந்த வழித் தடத்தில் ரயில்களின் நெரிசல் அதிகமானதால் நான்காவது வழித் தடத்தை உருவாக்க வடக்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதில், தாஜ் சரிவகம் மண்டலத்தில் உள்ள மரங்களை வெட்ட அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தை நாடிய நிலையில், குறைந்த மரங்களை வெட்டும் வகையில், மாற்று வழி இல்லையா? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இது குறித்து நாளை ஆஜராகுமாறு வடக்கு ரயில்வே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்