கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை சென்டிரலில் இருந்து ஐதராபாத் சென்ற சார்மினார் விரைவு ரயிலில், தேநீர் தயாரிக்க கழிவறை நீர் பயன்படுத்தப்பட்டது தொடர்பான காட்சிகள் இணையதளத்தில் வேகமாக பரவியது. செகந்திரபாத்தில் சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து கழிவறை நீரை பயன்படுத்திய தேநீர் விற்பனையாளருக்கு ரயில்வே நிர்வாகம் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.