இந்தியா

தங்களது கோரிக்கைகள் தொடர்பாக அரசு உடனடியாக அழைத்து பேச வேண்டும் - ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர் மாயவன்

சென்னை எழிலகம் வளாகத்தில் நடக்கும் ஜாக்டோ - ஜியோ அமைப்பின் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் 114 சங்கங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

தந்தி டிவி

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஊதிய மாற்றத்தையடுத்து 21 மாத நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் , உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. அரசு மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ அமைப்பு சார்பாக நடைபெறும் போராட்டத்தில் 114 சங்கங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

தங்களது கோரிக்கைகள் தொடர்பாக அரசு உடனடியாக அழைத்து பேச வேண்டும் எனவும், இல்லையெனில் காலவரையற்ற போராட்டத்தை தொடர்வோம் எனவும் ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர் மாயவன் கூறினார்.

Chennai Arrest | வளைத்து வளைத்து கைது - சென்னை முழுக்க ஒருவர் விடாமல் களையெடுத்து போலீஸ் அதிரடி

அதிர்ச்சியோடு விடிந்த பிப்ரவரி 1

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..