இந்தியா

தங்களது கோரிக்கைகள் தொடர்பாக அரசு உடனடியாக அழைத்து பேச வேண்டும் - ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர் மாயவன்

சென்னை எழிலகம் வளாகத்தில் நடக்கும் ஜாக்டோ - ஜியோ அமைப்பின் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் 114 சங்கங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

தந்தி டிவி

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஊதிய மாற்றத்தையடுத்து 21 மாத நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் , உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. அரசு மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ அமைப்பு சார்பாக நடைபெறும் போராட்டத்தில் 114 சங்கங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

தங்களது கோரிக்கைகள் தொடர்பாக அரசு உடனடியாக அழைத்து பேச வேண்டும் எனவும், இல்லையெனில் காலவரையற்ற போராட்டத்தை தொடர்வோம் எனவும் ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர் மாயவன் கூறினார்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை