இந்தியா

தங்களது கோரிக்கைகள் தொடர்பாக அரசு உடனடியாக அழைத்து பேச வேண்டும் - ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர் மாயவன்

சென்னை எழிலகம் வளாகத்தில் நடக்கும் ஜாக்டோ - ஜியோ அமைப்பின் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் 114 சங்கங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

தந்தி டிவி

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஊதிய மாற்றத்தையடுத்து 21 மாத நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் , உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. அரசு மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ அமைப்பு சார்பாக நடைபெறும் போராட்டத்தில் 114 சங்கங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

தங்களது கோரிக்கைகள் தொடர்பாக அரசு உடனடியாக அழைத்து பேச வேண்டும் எனவும், இல்லையெனில் காலவரையற்ற போராட்டத்தை தொடர்வோம் எனவும் ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர் மாயவன் கூறினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்