இந்தியா

11 ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராத செண்பக தோப்பு அணை - மதகுகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

11 ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராத செண்பக தோப்பு அணை - மதகுகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

தந்தி டிவி

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஜவ்வாது மலை அடிவாரத்தில் உலக வங்கி மற்றும் நபார்ட்டு வங்கி இணைந்து சுமார் 34 கோடி ரூபாய் மதிப்பில் செண்பக தோப்பு அணை கடந்த 2007 ல் கட்டப்பட்டது..

பணிகள் முடிவடைந்து அணை திறக்கப்படும் நிலையில் அணையின் 7 இரும்பு ஷட்டர்கள் பழுதடைந்து மூடமுடியாத நிலை ஏற்பட்டதால் அணை பயன்பாட்டிற்க்கு வர முடியாத நிலை ஏற்பட்டது. கடந்த 11 ஆண்டுகளாக அணையின் மதகுகளை சீர் செய்ய நடவடிக்கை எடுக்காததால் 46க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள ஏரிகளில் தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் கூறி வருகின்றனர். ஆனால், தற்போதைய கலசம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் அணையை சீரமைக்க உள்ளதாக கூறுகிறார்.

அணை எப்போது விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்க்கு வரும் என்பதே பொதுமக்களில் கேள்வியாக உள்ளது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு