இந்தியா

நாட்டையே கொதிக்க வைத்த லட்டு.. திருப்பதியில் கூடும் 9 பேர்

தந்தி டிவி

திருமலை லட்டு பிரசாதம் தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் நெய்யில் கலப்படம் செய்யப்பட்ட விவகாரம் குறித்து விசாரிப்பதற்காக சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. 9 பேர் கொண்ட இக்குழு இன்று திருப்பதியில் முதன்முறையாக கூடுகிறது. இதைத்தொடர்ந்து, விசாரணையின் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கும் என தெரிகிறது. திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் போலீசார் பதிவு செய்த கலப்பட நெய் வழக்கு, சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு மாற்றப்பட்ட பின்னர், விசாரணை அதிகாரி நியமிக்கப்படுவார் என கூறப்படுகிறது. சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை முடியும் வரை, தேவையான கட்டிடங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் கணினியை திருப்பதி தேவஸ்தானம் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை