இந்தியா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பவித்திர உற்சவம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பவித்ர உற்சவத்தையொட்டி, யாக சாலையில் பவித்ர மாலைகளை வைத்து சிறப்பு பூஜைகள் தொடங்கின.

தந்தி டிவி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பவித்திர உற்சவத்தின் முதல் நாளான இன்று பவித்ர மாலைகள் சமர்ப்பணம் நடைபெற்றது. இதையொட்டி பவித்ர மாலைகள் யாகசாலையில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சம்பங்கி மண்டபத்தில் பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள் மற்றும் சுகந்த திரவியங்களை கொண்டு உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

இதையடுத்து, தங்க, வைர, வைடூரிய ஆபரணங்களுடன் சிறப்பு அலங்காரத்தில் மலையப்பசாமி வலம் வருகிறார். ஸ்ரீதேவி, பூதேவி, சமேதராக 4 மாட வீதிகளில் வலம் வந்து அருள் பாலிக்கிறார். யாகசாலையில் வைக்கப்பட்ட பவித்திர மாலைகள் அனைத்தும் உற்சவருக்கும், மூலவருக்கும் நாளை சமர்ப்பிக்கப்படுகிறது. நாளை மறுநாள் பவித்ர உற்சவம் நிறைவு பெறுகிறது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி