இந்தியா

ஏழுமலையான் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா கோலாகலம்

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தீபங்கள் ஏற்றி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தந்தி டிவி

திருப்பதியில் கார்த்திகை தீபத்தையொட்டி, ஏழுமலையான் கோயில் பரிமள மண்டபத்தில், மாலை கோயில் முதன்மை செயல் அலுவலர் அனில்குமார், 100 தீபங்களை ஏற்றிவைத்து வழிபாடு நடத்தினார். தொடர்ந்து, ஜீயர்கள், கோயில் அர்ச்சகர்கள் உட்பட ஏராளமானோர் அகண்ட மண் பாத்திரத்தில் ​​தீபங்களை ஏந்தி, விமான வெங்கடேஸ்வர சுவாமிக்கு ஆரத்திஎடுத்து வழிபட்டனர். இதனையடுத்து, குலசேகரப்படி, துவார பாலகர்கள், கருடாழ்வார் சன்னதி, வரதராஜ சுவாமி சன்னதி, தங்கக் கிணறு, கொடிமரம், யோக நரசிம்மர் சுவாமி சன்னதிகளிலும் தீபம் ஏற்றப்பட்டது. பின்னர், கைகளில் தீபங்களை ஏந்தியவாறு 4 மாட வீதிகளில் வலம்வந்த அவர்கள், இறுதியாக கோயில் குளத்தில் கார்த்திகை தீபங்களை விட்டு வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு