இந்தியா

ஏழுமலையான் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா கோலாகலம்

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தீபங்கள் ஏற்றி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தந்தி டிவி

திருப்பதியில் கார்த்திகை தீபத்தையொட்டி, ஏழுமலையான் கோயில் பரிமள மண்டபத்தில், மாலை கோயில் முதன்மை செயல் அலுவலர் அனில்குமார், 100 தீபங்களை ஏற்றிவைத்து வழிபாடு நடத்தினார். தொடர்ந்து, ஜீயர்கள், கோயில் அர்ச்சகர்கள் உட்பட ஏராளமானோர் அகண்ட மண் பாத்திரத்தில் ​​தீபங்களை ஏந்தி, விமான வெங்கடேஸ்வர சுவாமிக்கு ஆரத்திஎடுத்து வழிபட்டனர். இதனையடுத்து, குலசேகரப்படி, துவார பாலகர்கள், கருடாழ்வார் சன்னதி, வரதராஜ சுவாமி சன்னதி, தங்கக் கிணறு, கொடிமரம், யோக நரசிம்மர் சுவாமி சன்னதிகளிலும் தீபம் ஏற்றப்பட்டது. பின்னர், கைகளில் தீபங்களை ஏந்தியவாறு 4 மாட வீதிகளில் வலம்வந்த அவர்கள், இறுதியாக கோயில் குளத்தில் கார்த்திகை தீபங்களை விட்டு வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்