இந்தியா

ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் : இலவச தரிசனத்திற்கு 20 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால், இலவச தரிசனத்திற்கு 20 மணி நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.

தந்தி டிவி

பள்ளிகள் விடுமுறை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி திருமலை ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் சாமி தரிசனம் செய்ய 20 மணி நேரமாகிறது. வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்கும் பக்தர்களுக்கு, குடிநீர், உணவு ஆகியவை வழங்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் 72 ஆயிரத்து 882 பேர் சாமி தரிசனம் செய்தனர். ஒரே நாளில் உண்டியல் காணிக்கை மூலமாக 4 கோடியே 20 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருவதால் தேவஸ்தானம் சிபாரிசு கடிதங்கள் வரும் 5ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?