திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 10 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கினால் வி.ஐ.பி. தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த புதிய நடவடிக்கை மூலம் இடைத்தரகர்களை கட்டுப்படுத்தி, சாதாரண பக்தர்களும் வி.ஐ.பி. தரிசனத்தில் ஏழுமலையானை வழிபட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நேரடியாக வழங்கப்படும் இந்த டிக்கெட்டுகள், ஆன்லைன் மூலம் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் நிர்வாகம் கூறியுள்ளது.