இந்தியா

திருப்பதி : பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் வசூல் - 23 இடைத்தரகர்கள் கைது

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்டம் காத்திருப்பு அறையில் தரிசனத்திற்காக சென்ற பக்தர்களை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

தந்தி டிவி
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்டம் காத்திருப்பு அறையில் தரிசனத்திற்காக சென்ற பக்தர்களை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது வி.ஐ.பி தரிசன டிக்கெட் வைத்திருந்த 5 பக்தர்களை பிடித்து விசாரித்ததில், அவர்கள் இடைத்தரகர் ஸ்ரீநிவாஸ் நாயுடு என்பவர் மூலம் கூடூர் தொகுதி எம்எல்ஏவின் பெயரில் டிக்கெட் வா​ங்கியது தெரியவந்தது. இதற்காக அவர்களிடம் பல ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து ஸ்ரீநிவாஸ் நாயுடு உள்ளிட்ட 23 இடைத்தரகர்களை போலீசார் கைது செய்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்