கட்டுப்பாட்டை இழந்து 20 அடி பள்ளத்தில் விழுந்த பைக் - தமிழக பக்தர் பலி திருப்பதி மலைப்பாதையில் இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரை தாண்டி சுமார் 20 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பிய வேலூர் பகுதியை சேர்ந்த நடராஜன் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் உடன் வந்த முரளி படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த நடராஜன் உடல் திருப்பதி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.