இந்தியா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

திருப்பதி ஏழுமலையான் கோயில் கும்பாபிஷேக விழா, வெகு விமரிசையாக நடைபெற்றது.

தந்தி டிவி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பாபிஷேக நிகழ்வு இன்று விமரிசையாக நடைபெற்றது. இதற்கான பூஜைகள் கடந்த 11 ஆம் தேதி தொடங்கிய நிலையில் தொடர்ந்து யாகசாலை பூஜைகள், மகா சாந்தி அபிஷேகம் உள்ளிட்டவை நடைபெற்றது. இந்த நிலையில் இன்று காலை ஆகம விதிகளின் படி, கோபுர கலசத்தின் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. மூலவருக்கு நடந்த கும்பாபிஷேக நிகழ்வை தொடர்ந்து வரதராஜ பெருமாள், வகுளமாதேவி உள்ளிட்ட தெய்வங்களின் சன்னதிகளிலும் புனித நீர் ஊற்றப்பட்டது. அப்போது கோவிந்தா கோவிந்தா என பக்தர்கள் கோஷங்களை எழுப்பி கோபுர தரிசனம் செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்