இந்தியா

சரியாக படிக்காத 2 மகன்களை கொலை செய்து தந்தை த*கொலை

தந்தி டிவி

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில், சரியாக படிக்காத மகன்களின் எதிர்காலம் குறித்த கவலையில், தந்தையே இரு மகன்களை கொலை செய்து தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓ.என்.ஜி.சி நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வந்த சந்திர கிஷோருக்கு இரு மகன்கள் உள்ள நிலையில், மூத்த மகன் ஒன்றாம் வகுப்பும், இரண்டாவது மகன் யுகேஜியும் படித்து வந்துள்ளனர். மகன்கள் சரியாக படிக்காததால் சந்திர கிஷோர் கவலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டில் சந்திரபோஸ் தூக்கிட்ட நிலையில் சடலமாகவும், அவரது மகன்கள் இருவரும் தண்ணீரில் தலை மூழ்கடிக்கப்பட்டு உயிரிழந்த நிலையிலும் கிடந்துள்ளனர். தொடர்ந்து உடல்களை கைப்பற்றிய போலீசார், இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை