இந்தியா

சரியாக படிக்காத 2 மகன்களை கொலை செய்து தந்தை த*கொலை

தந்தி டிவி

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில், சரியாக படிக்காத மகன்களின் எதிர்காலம் குறித்த கவலையில், தந்தையே இரு மகன்களை கொலை செய்து தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓ.என்.ஜி.சி நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வந்த சந்திர கிஷோருக்கு இரு மகன்கள் உள்ள நிலையில், மூத்த மகன் ஒன்றாம் வகுப்பும், இரண்டாவது மகன் யுகேஜியும் படித்து வந்துள்ளனர். மகன்கள் சரியாக படிக்காததால் சந்திர கிஷோர் கவலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டில் சந்திரபோஸ் தூக்கிட்ட நிலையில் சடலமாகவும், அவரது மகன்கள் இருவரும் தண்ணீரில் தலை மூழ்கடிக்கப்பட்டு உயிரிழந்த நிலையிலும் கிடந்துள்ளனர். தொடர்ந்து உடல்களை கைப்பற்றிய போலீசார், இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்