திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஊடல் உற்சவ விழா கோலாகலமாக நடைபெற்றது. கிழக்கு மாடவீதியில் மலையப்ப சுவாமியும், உபய நாச்சியார்களும் எதிர் எதிரே சந்தித்துக்கொண்ட நிலையில், அங்கு ஊடல் உற்சவம் நடைபெற்றது. அப்போது, கோவில் அர்ச்சகர்கள் மலையப்ப சுவாமி சார்பாக மலர் பந்துகளை உபய நாச்சியார்கள் மீது எறிந்தனர். மலையப்ப சுவாமி மீது தீவிர ஊடல் கொண்டிருந்த உபய நாச்சியார்களுடன் ஊர்வலமாக வந்த கோவில் அர்ச்சகர்கள் பதிலுக்கு மலையப்பசுவாமி மீது மலர் பந்துகளை எறிந்தனர்.