இந்தியா

திப்பு ஜெயந்தி விழா அரசு விழாவாக கொண்டாடப்படும் - கர்நாடக துணை முதலமைச்சர்

கர்நாடகாவில் வரும் 10ஆம் தேதி, 'திப்பு ஜெயந்தி' விழா, அரசு விழாவாக கொண்டாடப்படும் என அம்மாநில துணை முதல்வர் பரமேஸ்வர் அறிவித்துள்ளார்.

தந்தி டிவி

கர்நாடகாவில் வரும் 10ஆம் தேதி, 'திப்பு ஜெயந்தி' விழா, அரசு விழாவாக கொண்டாடப்படும் என அம்மாநில துணை முதல்வர் பரமேஸ்வர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக, உயர் அதிகாரிகளுடன் விதான் சவுதா சட்டப்பேரவை வளாகத்தில் அவர் ஆலோசனையில் ஈடுபட்டார். ஆலோசனை கூட்டத்தில் உள்துறை செயலாளர், கர்நாடக மாநில டிஜிபி, பெங்களூரு காவல் ஆணையர் சுனில் குமார் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் உட்பட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் பரமேஸ்வர், பல முக்கிய முடிவுகள் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்