திகார் சிறையில் இருந்து 3 ஆயிரம் கைதிகளை ஜாமீனில் விடுதலை செய்ய சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதில், ஆயிரத்து 500 பேர் பரோலிலும், ஆயிரத்து 500 பேரை இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட உள்ளனர். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சிறையில் நெரிசலை குறைக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.