இந்தியா

ஆபாச படம் பார்த்ததாக வந்த மிரட்டல் - போலீஸ் எனக்கூறி App மூலம் பணம் வேட்டை - தட்டி தூக்கிய போலீசார்

தந்தி டிவி

கோவை மற்றும் கேரளா மாநிலத்தை சேர்ந்த சிலரிடம் செல்போனில் ஆபாச படம் பார்த்ததாக கூறி மிரட்டி பணம் பறித்ததாக கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த கும்பல் கோவையை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து மாணவர்கள் 8 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கோகுலம் காலணியை சேர்ந்த பெனி மகன் சபரி என்பவர் மாணவர்களை தவறாக வழிநடத்தியதுடன், அவர்களுக்கு செல்போனில் புதிய செயலிலை பதிவிறக்கம் செய்து மிரட்டி பணம் பறிக்க கற்று கொடுத்ததும் தெரியவந்தது. தொடர்ந்து அவரையும் கைது செய்த போலீசார் 9 பேரையும் சிறையில் அடைத்தனர்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்