இந்தியா

அச்சுறுத்தும் `DEEP FAKE'..எச்சரித்த மத்திய அமைச்சர்

தந்தி டிவி

DEEP FAKE தொழில்நுட்பத்தின் அச்சுறுத்தலை எதிர்கொள்வது குறித்து அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், உயர் அதிகாரிகள் மற்றும் சமூக ஊடகங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜனநாயகத்திற்கு புதிய அச்சுறுத்தலாக DEEP FAKE தொழில்நுட்பம் உருவெடுத்துள்ளதாகவும், அதனை ஒழுங்குபடுத்த புதிய விதிமுறைகள் ஏற்படுத்தப்படும் என தெரிவித்தார். DEEP FAKE தொழில்நுட்பத்தை தாமாகவே கண்டறியும் விரிவான தொழில்நுட்பம் நம்மிடம் உள்ளதாக கூறிய அமைச்சர், DEEP FAKE மூலம் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை பாயும் என தெரிவித்தார். மேலும் இந்த தொழில்நுட்பத்தை ஒழுங்குபடுத்துவதற்கான 4 விதமான வழிமுறைகள் குறித்து அடுத்த 10 நாட்களுக்குள் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்