இந்தியா

அச்சுறுத்தும் `DEEP FAKE'..எச்சரித்த மத்திய அமைச்சர்

தந்தி டிவி

DEEP FAKE தொழில்நுட்பத்தின் அச்சுறுத்தலை எதிர்கொள்வது குறித்து அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், உயர் அதிகாரிகள் மற்றும் சமூக ஊடகங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜனநாயகத்திற்கு புதிய அச்சுறுத்தலாக DEEP FAKE தொழில்நுட்பம் உருவெடுத்துள்ளதாகவும், அதனை ஒழுங்குபடுத்த புதிய விதிமுறைகள் ஏற்படுத்தப்படும் என தெரிவித்தார். DEEP FAKE தொழில்நுட்பத்தை தாமாகவே கண்டறியும் விரிவான தொழில்நுட்பம் நம்மிடம் உள்ளதாக கூறிய அமைச்சர், DEEP FAKE மூலம் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை பாயும் என தெரிவித்தார். மேலும் இந்த தொழில்நுட்பத்தை ஒழுங்குபடுத்துவதற்கான 4 விதமான வழிமுறைகள் குறித்து அடுத்த 10 நாட்களுக்குள் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"