இந்தியா

"பிரதமரின் கடைசி சுதந்திர தின உரை இது தான்" - பகீர் கிளப்பிய மம்தா பானர்ஜி

தந்தி டிவி

செங்கோட்டையில் பிரதமர் மோடி ஆற்றும் கடைசி சுதந்திர தின உரையாக இது இருக்கட்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்...

மேற்கு வங்கத்தின் பெஹாலா பகுதியில் நேற்று திரிணாமுல் காங்கிரசால் ஏற்பாடு செய்யப்பட்ட சுதந்திர தின நிகழ்ச்சியில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அத்துடன் புதிய எதிர்க்கட்சிக் கூட்டணியான இந்தியா விரைவில் களமிறங்கி, 2024 பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் என தான் நம்புவதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்தியா கூட்டணி நாடு முழுவதும் பாஜகவை வீழ்த்தும் என தெரிவித்த அவர், மேற்கு வங்கத்தில் பாஜகவை திரிணாமுல் காங்கிரஸ் நிச்சயம் தோற்கடிக்கும் என உறுதி தெரிவித்தார். தனக்கு பிரதமராகும் எண்ணம் இல்லை என தெரிவித்த அவர், மேற்கு வங்கம் பாஜக அரசை அகற்ற மட்டுமே விரும்புவதாகக் குறிப்பிட்டார்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு