தொடர் விடுமுறை மற்றும் சனிக்கிழமையை ஒட்டி, திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
முன்னதாக, உற்சவர் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றன.
இதையடுத்து, வெள்ளிக் கவசத்தில் எழுந்தருளிய சனீஸ்வர பகவானை, நீண்ட வரிசையில் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.