இந்தியா

தென்பெண்ணை ஆற்று நீர் பங்கீடு விவகாரம் - தமிழகம் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு உத்தரவு

தென் பெண்ணை ஆற்றுநீர் பங்கீடு தொடர்பாக, கர்நாடகா - தமிழகம் இடையே பேச்சுவார்த்தை நடத்த குழுவை அமைத்து, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

தென் பெண்ணை ஆற்றுநீர் பங்கீடு மற்றும் யர்கோல் பகுதியில் கர்நாடகா அணை கட்டுவதை தடுக்கக் கோரி, தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், மத்திய அரசை அணுகுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து, நதிநீர் ப​ங்கீடு தொடர்பாக தீர்ப்பாயம் அல்லது குழுவை அமைக்கக் கோரி, மத்திய அரசிடம் தமிழக அரசு சார்பில் மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில் அதனை ஏற்று, இந்த விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த குழுவை அமைத்து, மத்திய அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. வரும் 24ம் நடைபெறும் குழுவின் முதல் கூட்டத்தில், இரு மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பங்கீடு பிரச்சனைக்கு, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி