இந்தியா

கேரளாவை நடுங்க வைத்த ராணுவ வீரர்... விசாரணையில் திடுக்கிடும் தகவல்

தந்தி டிவி

கொல்லம், கடைக்கல் பகுதியை சேர்ந்தவர் ஷைன்குமார். ராணுவ வீரரான இவர், ராஜஸ்தானில் பணியாற்றி வந்த நிலையில், விடுமுறைக்காக சொந்த ஊர் திரும்பியுள்ளார். அப்போது, ஓணம் பண்டிகையின் ஒரு பகுதியாக தன் நண்பரின் வீட்டு விருந்தில் கலந்து கொண்டு திரும்பிய ஷைன்குமாரை, மர்மகும்பல் கடத்தி சென்று தாக்கியதாகவும், முதுகில் PFI முத்திரை குத்தியதாகவும் தகவல் வெளியானது. இது தொடர்பான வீடியோவும் வெளியான நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில், ராணுவ வீரரான ஷைன்குமார், தான் பிரபலமாக வேண்டும் என்பதற்காக தனது நண்பர் ஜோஷி என்பவரை வைத்து அரங்கேற்றிய நாடகம் என்பது தெரியவந்தது. உடனே, இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை