இந்தியா

கேரளாவை நடுங்க வைத்த ராணுவ வீரர்... விசாரணையில் திடுக்கிடும் தகவல்

தந்தி டிவி

கொல்லம், கடைக்கல் பகுதியை சேர்ந்தவர் ஷைன்குமார். ராணுவ வீரரான இவர், ராஜஸ்தானில் பணியாற்றி வந்த நிலையில், விடுமுறைக்காக சொந்த ஊர் திரும்பியுள்ளார். அப்போது, ஓணம் பண்டிகையின் ஒரு பகுதியாக தன் நண்பரின் வீட்டு விருந்தில் கலந்து கொண்டு திரும்பிய ஷைன்குமாரை, மர்மகும்பல் கடத்தி சென்று தாக்கியதாகவும், முதுகில் PFI முத்திரை குத்தியதாகவும் தகவல் வெளியானது. இது தொடர்பான வீடியோவும் வெளியான நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில், ராணுவ வீரரான ஷைன்குமார், தான் பிரபலமாக வேண்டும் என்பதற்காக தனது நண்பர் ஜோஷி என்பவரை வைத்து அரங்கேற்றிய நாடகம் என்பது தெரியவந்தது. உடனே, இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை