இந்தியா

சைடிஷுக்காக ஏற்பட்ட ஆத்திரம்.. காத்திருந்து குத்தி குடலை உருவிய கொடூரன்

தந்தி டிவி

சைடிஷ் பிரச்சினை - பார் ஊழியர் கொலை

கேரள மாநிலம் திருச்சூரில் சைடிஷ் பிரச்சினையில் பார் ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதுக்காடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மதுபான பாரில், அழகப்பன் நகரை சேர்ந்த ஷிஜோ என்பவர் மது குடிக்க சென்றுள்ளார். அங்கு, சைடிஷ் அதிகமாக கேட்டதால் பார் ஊழியர்களுக்கும், ஷிஜோவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர், பாரில் இருந்து வெளியேறிய ஷிஜோ, பார் மூடும் வரை காத்திருந்து, பாரிலிருந்து அனைவரும் வெளியேறிய பின் கதவை மூடச் சென்ற ஊழியரான ஹேமச்சந்திரனை தாக்கி கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிந்த போலீசார் ஷிஜோவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"