இந்தியா

பேனர் இருந்த இடத்தை விட்டு விட்டு ரோடு போட்ட கும்பல் - "உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா?"

தந்தி டிவி

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் பிறந்தநாளையொட்டி நேற்று பல்வேறு இடங்களில், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் பேனர் வைத்து வாழ்த்து தெரிவித்திருந்தனர். அவற்றில் பல பேனர்கள் சாலையோரம் இருந்தாலும், சாலையிலும் கம்பு நட்டு வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் அரும்பார்த்தபுரம் பகுதியில் தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது, பேனர்கள் வைக்கப்பட்ட சாலையின் ஒரு பகுதியை மட்டும் விட்டுவிட்டு, தார் சாலை அமைக்கப்பட்டது. பேனர்களை அகற்றாமல், சாலையின் ஒருபகுதியையே ஒதுக்கிவிட்டு தார்சாலை அமைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்