இந்தியா

பேனர் இருந்த இடத்தை விட்டு விட்டு ரோடு போட்ட கும்பல் - "உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா?"

தந்தி டிவி

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் பிறந்தநாளையொட்டி நேற்று பல்வேறு இடங்களில், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் பேனர் வைத்து வாழ்த்து தெரிவித்திருந்தனர். அவற்றில் பல பேனர்கள் சாலையோரம் இருந்தாலும், சாலையிலும் கம்பு நட்டு வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் அரும்பார்த்தபுரம் பகுதியில் தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது, பேனர்கள் வைக்கப்பட்ட சாலையின் ஒரு பகுதியை மட்டும் விட்டுவிட்டு, தார் சாலை அமைக்கப்பட்டது. பேனர்களை அகற்றாமல், சாலையின் ஒருபகுதியையே ஒதுக்கிவிட்டு தார்சாலை அமைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு