இந்தியா

பக்தர்களுக்கு வைத்த அன்னதானம்..உண்ணாமல் பாதியிலேயே எழுந்த சோகம்..திருப்பதியில் பரபரப்பு

தந்தி டிவி

திருப்பதி மலை மற்றும் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு, திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அன்னதான அறக்கட்டளை மூலம், 3 வேளையும் இலவசமாக அன்னதானம் வழங்கி வருகிறது. இந்தநிலையில், திருமலையில் உள்ள அன்னதான கூடத்தில் உணவருந்திய பக்தர்கள் சிலர், உணவின் தரம் - சுவை மோசமாக உள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளனர். உணவருந்தும்போது இலையை பாதிலேயே மூடிய அவர்கள், அங்கு பணியில் இருந்த ஊழியர்களிடம் வாக்குவாதமும் செய்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே தேவஸ்தான நிர்வாகம், பக்தர்களுக்கு தரமான உணவையே வழங்குவதாக கூறி, குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ