இந்தியா

பக்தர்களுக்கு வைத்த அன்னதானம்..உண்ணாமல் பாதியிலேயே எழுந்த சோகம்..திருப்பதியில் பரபரப்பு

தந்தி டிவி

திருப்பதி மலை மற்றும் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு, திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அன்னதான அறக்கட்டளை மூலம், 3 வேளையும் இலவசமாக அன்னதானம் வழங்கி வருகிறது. இந்தநிலையில், திருமலையில் உள்ள அன்னதான கூடத்தில் உணவருந்திய பக்தர்கள் சிலர், உணவின் தரம் - சுவை மோசமாக உள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளனர். உணவருந்தும்போது இலையை பாதிலேயே மூடிய அவர்கள், அங்கு பணியில் இருந்த ஊழியர்களிடம் வாக்குவாதமும் செய்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே தேவஸ்தான நிர்வாகம், பக்தர்களுக்கு தரமான உணவையே வழங்குவதாக கூறி, குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’