இந்தியா

குழந்தை மீது விழுந்த தண்ணீர் டேங்க் - துடி துடித்து பலியான பயங்கரம்

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கருகம்பாளையத்தில் வாடகை வீட்டில் வசித்து வருபவர்கள் தமிழரசன் - நந்தினி தம்பதி. இவர்களது வீட்டின் ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரை மேல் பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி வைக்கப்பட்டிருந்த‌து. இந்த தண்ணீர் தொட்டி வியாழக்கிழமை மேற்கூரையை உடைத்துக்கொண்டு விழுந்த‌தில், தமிழரசன் - நந்தினி தம்பதியின் திவ்யஸ்ரீ என்ற 3 வயது குழந்தை படுகாயமடைந்த‌து. படுகாயமடைந்த குழந்தை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த‌து. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்த‌து. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்