இந்தியா

குழந்தை மீது விழுந்த தண்ணீர் டேங்க் - துடி துடித்து பலியான பயங்கரம்

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கருகம்பாளையத்தில் வாடகை வீட்டில் வசித்து வருபவர்கள் தமிழரசன் - நந்தினி தம்பதி. இவர்களது வீட்டின் ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரை மேல் பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி வைக்கப்பட்டிருந்த‌து. இந்த தண்ணீர் தொட்டி வியாழக்கிழமை மேற்கூரையை உடைத்துக்கொண்டு விழுந்த‌தில், தமிழரசன் - நந்தினி தம்பதியின் திவ்யஸ்ரீ என்ற 3 வயது குழந்தை படுகாயமடைந்த‌து. படுகாயமடைந்த குழந்தை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த‌து. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்த‌து. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்