இந்தியா

முந்த நினைத்து முடிந்த வாழ்க்கை - லாரி மீது மோதி நொறுங்கிய கார் - ஒரே குடும்பத்தில் பறிபோன

தந்தி டிவி

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த 5 பேர், சென்னையில் நகைகள் வாங்குவதற்காக வந்துள்ளனர். நகைகளை வாங்கிக் கொண்டு சொந்த ஊருக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். நெல்லூர் மாவட்டம் காவாலி அருகே, தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரியை முந்திச் செல்ல முயன்றபோது, சாலையில் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் லாரியில் கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலின் பேரில் வந்த போலீசார், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி