இந்தியா

ஒரே நேரத்தில் 12 இடங்களில் அதிரடி ரெய்டு - சிக்கிய முக்கிய ஆவணங்கள் - பரபரப்பில் கர்நாடகா

தந்தி டிவி

12 கர்நாடகா அரசு அதிகாரிகள், பொதுமக்களிடம் லஞ்சம்

வாங்கியதாகவும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து

சேர்த்ததாகவும் கர்நாடகா லோக் ஆயுக்தாவிற்கு புகார்கள்

குவிந்தன. இதை தொடர்ந்து 12 அதிகாரிகளுக்குச் சொந்தமான 55 இடங்களில், லோக் ஆயுக்த போலீசார் இன்று காலை முதல் அதிரடி சோதனைகளை நடத்தி வருகின்றனர். பெங்களூரு, துமக்கூரு சிமோகா, யாதகிரி, மண்டியா உள்ளிட்ட மாவட்டங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. தொழில் மற்றும்

வணிகத்துறை கூடுதல் இயக்குனர் முத்துக்குமார், வணிகவரித் துறை இணை ஆணையர் ரமேஷ் குமார், தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சிவமொக்கா பிரகாஷ் உள்ளிட்ட 12 அரசு அதிகாரிகளுக்கு சொந்தமான இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட லோக் ஆயுக்தா போலீசார் சோதனையில் ஈடுபட்டு பல்வேறு

முக்கிய ஆவணங்களை கைப்பற்றி வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்