இந்தியா

ஒரே நேரத்தில் 12 இடங்களில் அதிரடி ரெய்டு - சிக்கிய முக்கிய ஆவணங்கள் - பரபரப்பில் கர்நாடகா

தந்தி டிவி

12 கர்நாடகா அரசு அதிகாரிகள், பொதுமக்களிடம் லஞ்சம்

வாங்கியதாகவும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து

சேர்த்ததாகவும் கர்நாடகா லோக் ஆயுக்தாவிற்கு புகார்கள்

குவிந்தன. இதை தொடர்ந்து 12 அதிகாரிகளுக்குச் சொந்தமான 55 இடங்களில், லோக் ஆயுக்த போலீசார் இன்று காலை முதல் அதிரடி சோதனைகளை நடத்தி வருகின்றனர். பெங்களூரு, துமக்கூரு சிமோகா, யாதகிரி, மண்டியா உள்ளிட்ட மாவட்டங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. தொழில் மற்றும்

வணிகத்துறை கூடுதல் இயக்குனர் முத்துக்குமார், வணிகவரித் துறை இணை ஆணையர் ரமேஷ் குமார், தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சிவமொக்கா பிரகாஷ் உள்ளிட்ட 12 அரசு அதிகாரிகளுக்கு சொந்தமான இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட லோக் ஆயுக்தா போலீசார் சோதனையில் ஈடுபட்டு பல்வேறு

முக்கிய ஆவணங்களை கைப்பற்றி வருகின்றனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி