இந்தியா

ஒரே நேரத்தில் 12 இடங்களில் அதிரடி ரெய்டு - சிக்கிய முக்கிய ஆவணங்கள் - பரபரப்பில் கர்நாடகா

தந்தி டிவி

12 கர்நாடகா அரசு அதிகாரிகள், பொதுமக்களிடம் லஞ்சம்

வாங்கியதாகவும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து

சேர்த்ததாகவும் கர்நாடகா லோக் ஆயுக்தாவிற்கு புகார்கள்

குவிந்தன. இதை தொடர்ந்து 12 அதிகாரிகளுக்குச் சொந்தமான 55 இடங்களில், லோக் ஆயுக்த போலீசார் இன்று காலை முதல் அதிரடி சோதனைகளை நடத்தி வருகின்றனர். பெங்களூரு, துமக்கூரு சிமோகா, யாதகிரி, மண்டியா உள்ளிட்ட மாவட்டங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. தொழில் மற்றும்

வணிகத்துறை கூடுதல் இயக்குனர் முத்துக்குமார், வணிகவரித் துறை இணை ஆணையர் ரமேஷ் குமார், தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சிவமொக்கா பிரகாஷ் உள்ளிட்ட 12 அரசு அதிகாரிகளுக்கு சொந்தமான இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட லோக் ஆயுக்தா போலீசார் சோதனையில் ஈடுபட்டு பல்வேறு

முக்கிய ஆவணங்களை கைப்பற்றி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை