இந்தியா

3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை.. ஆயுதங்கள் பறிமுதல் - தேடுதல் பணி தீவிரம்

3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை.. ஆயுதங்கள் பறிமுதல் - தேடுதல் பணி தீவிரம்

தந்தி டிவி

3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை.. ஆயுதங்கள் பறிமுதல் - தேடுதல் பணி தீவிரம்

காஷ்மீரில் லக்‌ஷர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 3 தீவிரவாதிகளை போலீசார் சுட்டுக் கொன்று உள்ளனர்.காஷ்மீரில் கடந்த சில நாட்களில் 7 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இதனையடுத்து, காஷ்மீர் முழுவதும் போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். இந்நிலையில், தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளை போலீசார் பிடிக்க சென்றபோது, தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தி உள்ளனர். தொடர்ந்து தீவிரவாதிகள் 3 பேரையும் போலீசார் சுட்டுக் கொன்றனர். சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் லக்‌ஷர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் காஷ்மீர் போலீசார் தெரிவித்து உள்ளனர். மேலும், காஷ்மீர் முழுவதும் தேடுதல் பணியை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?