இந்தியா

3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை.. ஆயுதங்கள் பறிமுதல் - தேடுதல் பணி தீவிரம்

3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை.. ஆயுதங்கள் பறிமுதல் - தேடுதல் பணி தீவிரம்

தந்தி டிவி

3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை.. ஆயுதங்கள் பறிமுதல் - தேடுதல் பணி தீவிரம்

காஷ்மீரில் லக்‌ஷர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 3 தீவிரவாதிகளை போலீசார் சுட்டுக் கொன்று உள்ளனர்.காஷ்மீரில் கடந்த சில நாட்களில் 7 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இதனையடுத்து, காஷ்மீர் முழுவதும் போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். இந்நிலையில், தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளை போலீசார் பிடிக்க சென்றபோது, தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தி உள்ளனர். தொடர்ந்து தீவிரவாதிகள் 3 பேரையும் போலீசார் சுட்டுக் கொன்றனர். சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் லக்‌ஷர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் காஷ்மீர் போலீசார் தெரிவித்து உள்ளனர். மேலும், காஷ்மீர் முழுவதும் தேடுதல் பணியை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை