இந்தியா

3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை.. ஆயுதங்கள் பறிமுதல் - தேடுதல் பணி தீவிரம்

3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை.. ஆயுதங்கள் பறிமுதல் - தேடுதல் பணி தீவிரம்

தந்தி டிவி

3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை.. ஆயுதங்கள் பறிமுதல் - தேடுதல் பணி தீவிரம்

காஷ்மீரில் லக்‌ஷர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 3 தீவிரவாதிகளை போலீசார் சுட்டுக் கொன்று உள்ளனர்.காஷ்மீரில் கடந்த சில நாட்களில் 7 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இதனையடுத்து, காஷ்மீர் முழுவதும் போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். இந்நிலையில், தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளை போலீசார் பிடிக்க சென்றபோது, தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தி உள்ளனர். தொடர்ந்து தீவிரவாதிகள் 3 பேரையும் போலீசார் சுட்டுக் கொன்றனர். சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் லக்‌ஷர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் காஷ்மீர் போலீசார் தெரிவித்து உள்ளனர். மேலும், காஷ்மீர் முழுவதும் தேடுதல் பணியை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்