இந்தியா

கூலிப்படை மூலம் மருமகனை தீர்த்துக்கட்டிய தொழில் அதிபர் - முக்கிய குற்றவாளி கைது

தெலங்கானாவில் கூலிப்படை மூலம் மகளின் கணவரை கவுரவ கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளி பீஹாரில் பிடிபட்டுள்ளான்.

தந்தி டிவி

தெலங்கானாவில் கூலிப்படை மூலம் , மகளின் கணவரை கவுரவ கொலை செய்த வழக்கில், முக்கிய குற்றவாளி பீஹாரில் பிடிபட்டுள்ளான். நலகொண்டா மாவட்டம் மிரியாலகுடா என்ற இடத்தில் கடந்த 14 ம் தேதி, பட்டப்பகலில், பிரனாய் நாயக் என்பவர் வெட்டி கொல்லப்பட்டார். ரியல் எஸ்டேட் அதிபர் மாருதிராவ் என்பவர் தனது மகள் அமிர்தவர்ஷினியின் கணவரான பிரனாய் நாயக்கை ஒரு கோடி ரூபாய் கொடுத்து, கூலிப்படை மூலம் படுகொலை செய்தது, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த கவுரவ கொலை வழக்கில், முக்கிய குற்றவாளியான சர்மா என்பவன், பீஹாரில் பிடிபட்டுள்ளதாக தெலங்கானா போலீசார் தெரிவித்துள்ளனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி