இந்தியா

தெலங்கானா : பக்கத்து வீட்டுக்காரர் மீது ஏகே47 துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு

தெலங்கானா மாநிலம் சித்தி பேட்டா மாவட்டத்தில் பக்கத்து வீட்டுக்காரரை, ஏகே47 துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி

தெலங்கானா மாநிலம் சித்தி பேட்டா மாவட்டத்தில் பக்கத்து வீட்டுக்காரரை, ஏகே47 துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சதானந்தம் என்பவருக்கும், அவரது வீட்டின் அருகில் உள்ள கங்கராஜூ என்பவருக்கும் கடந்த ஒரு வாரமாக வீட்டு மத்தியில் உள்ள சுவர் காரணமாக, தகராறு இருந்துள்ளது. நேற்று இரவு வாக்குவாதம் முற்றி கைகலப்பான நிலையில், இன்று காலை, கங்கராஜூ, ஏகே47 துப்பாக்கியால், சதானந்தம் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதில் சதானந்தம் மற்றும் குடும்பத்தினர் தப்பித்த நிலையில், ஏகே47 துப்பாக்கி எப்படி கங்கராஜூவுக்கு கிடைத்தது என்பது தொடர்பாக, போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்