இந்தியா

அதிதீவிர சூறாவளி புயலாக மாறியது டவ்தே; குஜராத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்ப்பு

அரபிக்கடலில் அதிதீவிர சூறாவளி புயலாக மாறியிருக்கும் டவ்தே புயல் குஜராத் கடற்கரையில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தந்தி டிவி

அரபிக்கடலில் அதிதீவிர சூறாவளி புயலாக மாறியிருக்கும் டவ்தே புயல் குஜராத் கடற்கரையில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள லட்சத்தீவு பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 15-ஆம் தேதி டவ்தே புயலாக மாறியது. வடக்கு திசை நோக்கி நகரத்தொடங்கிய புயல் கோவா கடல் பகுதியில் அதிதீவிர சூறாவளி புயலாக வலுப்பெற்றது. கோவாவிற்கு தென்மேற்கே 130 கிலோ மீட்டர் தொலைவிலும், மும்பைக்கு தெற்கே 450 கிலோ மீட்டர் தொலைவில் நிலைக்கொண்டிருந்த புயல், தொடர்ந்து வடமேற்கு திசை நோக்கி நகர்கிறது. அதே திசையில் பயணிக்கும் புயல் 17-ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து மேற்கே அரபிக்கடல் நிலை நிலைக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேகத்தில் பயணிக்கும் புயல் 18-ஆம் தேதி அதிகாலையில் குஜராத் மாநிலம் போர்பந்தர் மற்றும் மகுவா இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு