இந்தியா

எஸ்.வி.சேகருக்கு ஜாமின் - ஜூலை 18ஆம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவு

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில், நடிகர் எஸ்.வி. சேகருக்கு, ஜாமின் வழங்கப்பட்டுள்ளது

தந்தி டிவி

எஸ்.வி.சேகர் மீது 4 பிரிவுகளில், சென்னை மத்திய குற்றபிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதையடுத்து, முன் ஜாமின் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில், எஸ்.வி.சேகர் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில், தாக்கல் செய்யப்பட்ட மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால், சென்னை எழும்பூரில் உள்ள தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று எஸ்.வி.சேகர் ஆஜரானார். அப்போது, எஸ்.வி.சேகருக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம், ஜூலை 18ம் தேதி மீண்டும் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்