இந்தியா

சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை விவகாரம் - சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை விவகாரத்தை, சிபிஐ விசாரணைக்கு மாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தோழி ரியா சக்கரவர்த்தி பிகார் மாநிலம் பாட்னாவில் தற்கொலை தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை மும்பைக்கு மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி ரிஷிகேஷ் ராய் தலைமையிலான அமர்வு முன் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் முடிவில், சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை விவகாரத்தை, சிபிஐ விசாரணைக்கு மாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து ஆவணங்களையும் ஆதாரங்களையும் சிபிஐக்கு அளிக்க மும்பை போலீசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது சட்டப்பூர்வமானது என்றும் சுஷாந்த் சிங்கின் தற்கொலை விவகாரத்தை சிபிஐ விசாரிக்க கோர பீகார் அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு