இந்தியா

சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை விவகாரம் - சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை விவகாரத்தை, சிபிஐ விசாரணைக்கு மாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தோழி ரியா சக்கரவர்த்தி பிகார் மாநிலம் பாட்னாவில் தற்கொலை தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை மும்பைக்கு மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி ரிஷிகேஷ் ராய் தலைமையிலான அமர்வு முன் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் முடிவில், சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை விவகாரத்தை, சிபிஐ விசாரணைக்கு மாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து ஆவணங்களையும் ஆதாரங்களையும் சிபிஐக்கு அளிக்க மும்பை போலீசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது சட்டப்பூர்வமானது என்றும் சுஷாந்த் சிங்கின் தற்கொலை விவகாரத்தை சிபிஐ விசாரிக்க கோர பீகார் அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?