இந்தியா

உச்சநீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பதவியேற்றார்

ரஞ்சன் கோகாய் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.போப்டே பதவி ஏற்றுக் கொண்டார்.

தந்தி டிவி

ரஞ்சன் கோகாய் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.போப்டே பதவி ஏற்றுக் கொண்டார். டெல்லி ராஷ்டிரபதிபவனில் நடந்த நிகழ்ச்சியில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பதவி பிரமாணம் செய்து வைத்தார். கடந்த 2012 ஆண்டு மத்தியபிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக போப்டே நியமிக்கப்பட்டிருந்தார். 2013ல் உச்சநீதிமன்ற நீதிபதியாக அவர் பதவி உயர்வு பெற்றார். அயோத்தி, ஆதார் உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் தீர்ப்பளித்த அமர்வில் எஸ்.ஏ.போப்டே இடம்பெற்றிருந்தார். உச்சநீதிமன்றத்தில் 47-வது தலைமை நீதிபதி போப்டே 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 23 வரை, சுமார் 17 மாதங்கள் பதவியில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்