Supreme Court | Cough Syrup | குழந்தைகளின் உயிரைக் குடித்த இருமல் மருந்து விவகாரம் - கோர்ட் அதிரடி தரமற்ற இருமல் மருந்து விவகாரம்- மத்திய அரசுக்கு நோட்டீஸ் தரக்குறைவான இருமல் மருந்து விவகாரத்தில் நீதிமன்ற கண்காணிப்பின்கீழ், விசாரணை கோரிய மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாராவில் தரக்குறைவான இருமல் மருந்து உட்கொண்டதாக குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் காஞ்சிபுரத்தை சேர்ந்த மருந்து ஆலையின் பெயரும் அடிபட்டது குறிப்பிடத்தக்கது.