திருப்பதி ஏழுமலையானை சுவாமி தரிசனம் செய்வதற்காக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நேற்று திருமலைக்கு வந்தார். அவருக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை அதிகாரிகள் வரவேற்பளித்தனர். இன்று காலை ரஞ்சன் கோகாய் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் பட்டர்கள், ஸ்ரீரங்கநாயகி மண்டபத்தில் வேத ஆசீர்வாதம் செய்து தீர்த்த பிரசாதம் வழங்கினார்.