இந்தியா

சபரிமலை வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதில் எந்த ஆட்சேபமும் இல்லை என தேவசம்போர்டு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

* சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட 54 மனுக்கள் மீதான விசாரணை, அரசியல் சாசன அமர்வு முன்பு நடைபெற்றது.

* இதில், நாயர் அமைப்பு சார்பில் முதலில் வாதத்தை தொடங்கிய மூத்த வழக்கறிஞர் பராசரன், சபரிமலை கோயில் விவகாரம் தீண்டாமை கிடையாது என்றும், அது பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் மரபு மற்றும் மத நம்பிக்கை என்றும் கூறினார்.

* தேவசம் போர்டு சார்பாக வாதிட்டபோது, சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என, உச்சநீதிமன்றத்தில் ​தெரிவிக்கப்பட்டது.

* இதனையடுத்து, சபரிமலை வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்