இந்தியா

விண்வெளியில் விவசாயத்தை தொடங்கிய சுபான்ஷு சுக்லா

தந்தி டிவி

ஆக்ஸியம் 4 திட்டத்தின் மூலம் சர்வதேச விண்வெளி மையம் சென்றுள்ள சுபான்ஷு சுக்லா, விண்வெளி விவசாயத்தை தொடங்கியுள்ளார்.

கடந்த 25ஆம் தேதி விண்வெளிக்கு புறப்பட்டு, 26 ஆம் தேதி சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்த சுபான்சு சுக்லா, கடந்த 6 நாட்களாக விண்வெளியில் பல்வேறு விதமான பணிகளை மேற்கொண்டு வந்தார்.கடந்த 27ஆம் தேதி நுண்ணீர்ப்பு விசை மண்டலம் குறித்தும், அதனால் விண்வெளியில் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

28ஆம் தேதி முதல், ஈர்ப்பு விசையின் தாக்கம் இல்லாத விண்வெளியில், விதை எப்படி முளைக்கும்? அங்கு வளரும் தாவரங்களின் தன்மை குறித்து ஆய்வுகளை செய்து வருகிறார்.இதற்காக, தன்னுடன் எடுத்துச் சென்ற வெந்தயம் மற்றும் பயிறு விதைகளை சுபான்ஷு சுக்லா வளர்க்கத் தொடங்கியுள்ளார். பூமி திரும்பும் போது, விண்வெளியின் தாவரங்களின் வளர்ச்சி மற்றும் பூமியின் ஈர்ப்பு விசையில் வளரும் தாவர வளர்ச்சியோடு ஒப்பிட்டு, ஆய்வறிக்கை தயார் செய்ய உள்ளார். 

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ