இந்தியா

மாணவியின் உயிர் போகும் நிலை.. Meta கொடுத்த அலர்ட் - உயிரை காத்த திரில் நிமிடங்கள்

தந்தி டிவி

உத்தர பிரதேசத்துல தற்கொலைக்கு முயன்ற கல்லூரி மாணவி, மெட்டா நிறுவனத்தின் எச்சரிக்கையால காப்பாற்றப்பட்டிருக்காங்க... அது எப்படி, என்ன நடந்ததுனு விரிவா பாக்கலாம்....

காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயன்ற 20 வயது கல்லூரி மாணவியை மெட்டா நிறுவனத்தின் எச்சரிக்கையால் துரிதமாக செயல்பட்டு போலீசார் காப்பாற்றினர். உத்தர பிரதேசம் மாநிலம் பரேலியை சேர்ந்த கல்லூரி மாணவி, இளைஞர் ஒருவரை இன்ஸ்டாகிராமில் காதலித்து வந்தார். இந்த நிலையில், அந்த இளைஞர் தொடர்பைத் துண்டித்ததால் பூச்சிக் கொல்லி மருந்தையும், தற்கொலை குறிப்பையும் அந்த மாணவி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். இதுகுறித்து உள்ளூர் காவல் நிலையத்துக்கு மெட்டா நிறுவனம் அலர்ட் செய்ததன்பேரில் போலீசார் 16 நிமிடத்தில் சென்று, பூச்சி மருந்து குடித்த நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை