இந்தியா

20-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுட்டுக்கொலை...நள்ளிரவில் காரில் வந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்

தந்தி டிவி

தெலங்கானா மாநிலத்தில், 20-க்கும் மேற்பட்ட நாய்களை, முகமூடி அணிந்த மர்ம கும்பல் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெகபூப்நகர் மாவட்டத்தில் உள்ள பொன்னக்கல் கிராமத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரும், விலங்குகள் நல அமைப்பினரும், உயிரிழந்த நாய்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த நாய்களை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில், நள்ளிரவில், காரில் வந்து இறங்கிய முகமூடி அணிந்த மர்ம நபர்கள் சிலர், திடீரென தெருநாய்களை துப்பாக்கியால் சுட்டதாகவும், இதில், 20-க்கும் மேற்பட்ட நாய்கள் உயிரிழந்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை