இந்தியா

20-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுட்டுக்கொலை...நள்ளிரவில் காரில் வந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்

தந்தி டிவி

தெலங்கானா மாநிலத்தில், 20-க்கும் மேற்பட்ட நாய்களை, முகமூடி அணிந்த மர்ம கும்பல் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெகபூப்நகர் மாவட்டத்தில் உள்ள பொன்னக்கல் கிராமத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரும், விலங்குகள் நல அமைப்பினரும், உயிரிழந்த நாய்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த நாய்களை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில், நள்ளிரவில், காரில் வந்து இறங்கிய முகமூடி அணிந்த மர்ம நபர்கள் சிலர், திடீரென தெருநாய்களை துப்பாக்கியால் சுட்டதாகவும், இதில், 20-க்கும் மேற்பட்ட நாய்கள் உயிரிழந்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி