இந்தியா

அரபிக்கடலில் உருவாகியுள்ள புயல்... கேரளா - கன்னியாகுமரிக்கு எச்சரிக்கை

அரபிக்கடலில் உருவாகியுள்ள டவ்-தே புயல் காரணமாக கேரளா மற்றும் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மத்திய நீர்வள ஆணையம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

தந்தி டிவி

அரபிக்கடலில் உருவாகியுள்ள புயல்... கேரளா - கன்னியாகுமரிக்கு எச்சரிக்கை

அரபிக்கடலில் உருவாகியுள்ள டவ்-தே புயல் காரணமாக கேரளா மற்றும் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மத்திய நீர்வள ஆணையம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.கேரளா மற்றும் தமிழகத்தின் சில மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மிதமான மற்றும் கன மழை பெய்து வருகிறது. கேரளாவில் கன மழை காரணமாக பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள அச்சன்கோயில், மணிமலையார் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அபாய அளவை தாண்டி ஆறுகளில் வெள்ள நீர் செல்வதால் கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மத்திய நீர்வள ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.இதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தில் கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு திருவரம்பு பகுதியில் அதிகளவில் தண்ணீர் செல்வதால் ஆற்றின் கரையோர பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல நடவடிக்கை எடுக்குமாறு மத்திய நீர்வள ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை